நாடு லாக்டவுன் பண்ணப் படாததற்கும், எனது மகனின் திருமண நிகழ்விற்கும் தொடர்பு இல்லை.. வதந்தி பரப்ப வேண்டாம்.
நாட்டில் முடக்க நிலை அறிவிக்கப்படாமைக்கும் தனது மகனின்
திருமண நிகழ்விற்கும் தொடர்பு கிடையாது என இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது மகனின் திருமண நிகழ்வு நடாத்தப்படுவதன் காரணமாகவே இன்னமும் நாடு முடக்கப்படவில்லை எனவும் திருமணத்தின் பின்னர் நாடு முடக்கப்படும் எனவும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியில் எவ்வித உண்மையும் கிடையாது எனவும் முற்றிலும் ஓர் வதந்தி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் ட்விட்டர் ஊடாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
நாடு லாக்டவுன் பண்ணப் படாததற்கும், எனது மகனின் திருமண நிகழ்விற்கும் தொடர்பு இல்லை.. வதந்தி பரப்ப வேண்டாம்.
Reviewed by Madawala News
on
August 12, 2021
Rating: