யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதியில் இன்று (12) இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காரைநகர் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கல்லுண்டாய் வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் காலை மழை பெய்ததன் காரணமாக வீதி வழுக்கும் தண்மையுடன் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேகமாக வந்த பேருந்து அப்பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
VIDEO இணைப்பு : கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த இ.போ.ச பஸ்.. பலர் காயம்
Reviewed by Madawala News
on
August 12, 2021
Rating: