வீட்டினுள் சாராய பேக்டரி... முன்னாள் UNP மாகாணசபை உறுப்பினர் உட்பட 3 பேர் கைது.



மாத்தறை - மாக்காவிட்ட நாவிமன பிரதேசத்தில் 3 மாடிக் குடியிருப்பொன்றில் சட்டவிரோதமாக நடத்தப்பட்ட மதுபான உற்பத்தி நிலையம் மாத்தறை காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

அதன்போது காவல்துறையினரால் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களுள் பிரதான சந்தேக நபராக கருதப்படுபவர், ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அத்துடன் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட எரிவாயு சிலிண்டர், பீப்பாய், உபகரணங்கள் மற்றும் 25,000 மில்லிலீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணை மாத்தறை காவல் நிலையத்தின் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
வீட்டினுள் சாராய பேக்டரி... முன்னாள் UNP மாகாணசபை உறுப்பினர் உட்பட 3 பேர் கைது. வீட்டினுள் சாராய பேக்டரி... முன்னாள் UNP மாகாணசபை உறுப்பினர் உட்பட 3 பேர் கைது. Reviewed by Madawala News on June 16, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.