தனிமைப்படுத்தப்பட்ட வட்டவளை – வெலிஓயா தோட்டத் தொழிலாளர்கள் இன்று தனிமைப்படுத்தல் விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறைந்த வருமானம் பெறுவோருக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு தமக்கு வழங்கப்படவில்லை எனக் கோரியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தால் ஏனைய தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தமக்கும் வழங்கப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த மே 21ஆம் திகதி முதல் இப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
நிவாரணத்தை TVயிலும், பேப்பரிலும் மட்டுமே பார்க்கிறோம்!மலையகத்தில் ஆர்ப்பாட்டம்!
Reviewed by Madawala News
on
June 15, 2021
Rating: