அடுத்த மூன்று வாரங்களில் கொரோனாவைரஸ் உயிரிழப்புகள் குறைவடையலாம்
என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.புதிய கொரோனா வைரஸ் காரணமாகவே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்போது உயிரிழப்புகள் அதிகரிக்கும் என தெரிவித்துள்ள அவர் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் 21 ம் திகதி நீக்கப்படுவது குறித்து எதிர்வுகூற முடியாது என தெரிவித்துள்ள அவர் இராஜாங்க அமைச்சர் புள்ளி விபரங்களை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முடிவெடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் 21 ம் திகதி நீக்கப்படுவது குறித்து எதிர்வுகூற முடியாது
Reviewed by Madawala News
on
June 15, 2021
Rating: