போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் உயிரிழப்புகளும் நோயாளிகள் எண்ணிக்கையும் குறைவடையவில்லை.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகளும்
நோயாளிகள் எண்ணிக்கையும் குறைவடையவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்சினிபெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது உயிரிழப்புகளும் நோயளர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழப்புகள் 28 வீதத்தினால் அதிகரித்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கு பாதிக்கப்பட்டவர்கள் தற்போதும் கண்டுபிடிக்கப்படுவதால் இந்த அதிகரிப்பு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரமளவில் நோயாளர்கள் எண்ணிக்கை குறைவடையும் என அவர் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளார்
போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் உயிரிழப்புகளும் நோயாளிகள் எண்ணிக்கையும் குறைவடையவில்லை.
Reviewed by Madawala News
on
June 10, 2021
Rating: