ரனில் விக்ரமசிங்கவுக்கு அமைச்சரை பதவி ? நளீன் பண்டார



எதிர்கட்சியை பலவீனப்படுத்துவதற்கு ரணில்விக்கிரமசிங்கவை பயன்படுத்த அரசாங்கம்

முயலக்கூடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.


ரணில்விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்குள் நுழைவது குறித்து அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயே அதிகம் பேசுகின்றார் என நளின்பண்டார தெரிவித்துள்ளார்.


பெருமளவிற்கு நெருக்கடியில் சிக்குண்டுள்ள அரசாங்கம் அதிலிருந்து விடுபடுவதற்காக ரணில்விக்கிரமசிங்கவை அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.


அல்லது ரணில்விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர் எதிர்கட்சி இரண்டாகும் என அரசாங்கம் கற்பனை செய்யக்கூடும் என நளின்பண்டார தெரிவித்துள்ளார்.


அதிகாரத்தை இழக்கும்போது இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவது வழமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சியை பலவீனப்படுத்தி தன்னுடைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ரணில்விக்கிரமசி;ங்கவை கூட பயன்படுத்தலாம் என்பதே அரசாங்கத்தின் திட்டம் என அவர் தெரிவித்துள்ளார்.


ரணில்விக்கிரமசிங்கவை தனது பக்கம் அரசாங்கம் எடுப்பது குறித்து ஐக்கியமக்கள் சக்திக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை அவர் அனுபவம் உள்ள அரசியல்வாதி,அவருக்கு தனிப்பட்ட இராஜதந்திர தொடர்புகள் உள்ளன,எங்களிற்கு ஆட்சேபனையும் இல்லை ஆனால் எதிர்கட்சி பலவீனப்படாது என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ரனில் விக்ரமசிங்கவுக்கு அமைச்சரை பதவி ? நளீன் பண்டார ரனில் விக்ரமசிங்கவுக்கு அமைச்சரை பதவி ? நளீன் பண்டார Reviewed by Madawala News on June 10, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.