இலங்கையில் மிகவும் குறைந்த வயதுடைய கொரோனா மரணம்
பதிவாகியுள்ளது.
பிறந்து 8 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் குழந்தையொன்று கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் ஒன்று கம்பளை மருத்துவமனையில் பதிவாகியுள்ளது.
கம்பளை, புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த குழந்தை ஒன்றே இவ்வாறு மரணித்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி பிறந்த குழந்தை 27 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியிருந்தது.
வீட்டிற்கு வந்ததை அடுத்து காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்த தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இலங்கையில் மிகவும் குறைந்த வயதுடைய கொரோனா மரணம் பதிவாகியுள்ளது. #கம்பளை
Reviewed by Madawala News
on
June 10, 2021
Rating: