கொரோனா வைரஸால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழக்கின்ற நிலையில், மதுபாவனையால் தினமும் 63 பேர் உயிரிழக்கின்றனர்.
ஒன்லைன் ஊடாக மதுபான போத்தல்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவத்துள்ளது.
கொரோனா வைரஸால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழக்கின்ற நிலையில், நாளொன்றுக்கு மதுபானங்களால் மாத்திரம் 63 பேர் உயிரிழப்பதாகவும் அச்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நிலைமைகளால் நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பொருள்கள், மருந்துகளை வீடுகளுக்கு விநியோகிக்க இதுவரையில் எந்தவிதமானத் திட்டங்களும் இல்லை என்பதை சுட்டிக்காட்டும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், ஒன்லைனூடாக மதுபானங்களை வீடுகளுக்கு விநியோகிக்கும் செயற்பாடுகள் வெட்கத்துக்குரியதெனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் நாளொன்றுக்கு 60 பேர் உயிரிழக்கின்ற நிலையில், மதுபாவனையால் தினமும் 63 பேர் உயிரிழக்கின்றனர்.
Reviewed by Madawala News
on
June 16, 2021
Rating: