நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்து வரும் சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகரித்தது..



 நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்து வரும் சில தினங்களுக்கு மாலை வேளையில் இடியுடன்

கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகரித்துக் காணப்படுகின்றது. 


மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல், வடமத்திய,தென் மற்றும் ஊவா    மாகாணங்களின் பல இடங்களில்  மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


இப் பிராந்தியங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான  பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். 


பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று மதியம் சுமார் 12.12 மணியளவில் கோளவத்தை, வேதெனிய, வட்டாரம, அம்பகமுவ, திகன, மகாவெல, கல்கமுவ, அம்பாறை மற்றும் ஒலுவில்  போன்ற இடங்களுக்கு மேலாக  சூரியன்  உச்சம் கொடுக்கின்றது.


கடல் பிராந்தியங்களில் 

**************************


கொழும்பு தொடக்கம் காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் சீரான வானிலை காணப்படும்.


கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 km வேகத்தில் காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் வடமேற்குத் திசையில் இருந்து தென்மேற்குத் திசையை நோக்கியும் ஏனைய கடல் பிராந்தியங்களில் தென் கிழக்குத் திசையில் இருந்து வடகிழக்குத் திசையை நோக்கியும் காற்று வீசும். 


இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற வேளைகளில் தற்காலிகமாக மணித்தியாலத்திற்கு 70 ‐80 km இலும் கூடிய வேகத்தில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் .


தேசமானிய 

மொஹமட் சாலிஹீன் 

சிரேஸ்ட வானிலை அதிகாரி. 


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்து வரும் சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகரித்தது..  நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்து வரும் சில தினங்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அதிகரித்தது.. Reviewed by Madawala News on April 08, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.