ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரண்டு கட்சிகளின் தலைவர்கள், அரசாங்கத்தின்
உயர் மட்ட தலைவர் ஒருவரை சந்திக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.https://am.lk/local-news/item/56824-2021-02-25-04-56-55
இதற்காக நேரத்தை ஒதுக்கி தருமாறு அவர்கள் கேட்டுள்ளதுடன் அரசாங்கத் தரப்பில் இருந்து இதுவரை பதில் எனவும் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
அரசாங்கத்தின் உயர் மட்ட தலைவரை சந்தித்து அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தமது விருப்பத்தை தெரிவிப்பது அவர்களின் நோக்கம் எனக் கூறப்படுகிறது.
தம்மை அரசாங்கம் நன்றாக கவனித்துக் கொள்வதாக 20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்த சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதை அடுத்தே, இந்த கட்சித் தலைவர்கள் இப்படியான அரசியல் தீர்மானத்தை எடுத்துள்ளதாக பேசப்படுகிறது.
ஜனநாயக மக்கள் முன்னணியில் தலைவர் மனோ கணேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனி திகாம்பரம் ஆகியோரே இவ்வாறு அரசாஙகத்தின் உயர் மட்டத் தலைவரை சந்திக்க தயாராகி வருவதாக ASIAN MIRROR செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.