சிகிச்சை நிலையத்தில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் ஆர்ப்பாட்டம்.



பொகவந்தலாவ - மோரா தோட்ட பகுதியில் உள்ள கொரோனா 
சிகிச்சை நிலையத்தில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் இன்று (24) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்த சிகிச்சை நிலையத்தில் சமைக்கப்படும் உணவில் புளுக்கள் காணப்படுவதாகவும், மலசலகூட வசதிகள் இல்லை எனவும் தெரிவித்த தொற்றாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமும் சோறும் சம்பலுமே உணவாக வழங்கப்படுவதாகவும், குடிப்பதற்கு கொதிக்க வைக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுவதில்லை, கொத்தமல்லி நீரும் குடிப்பதற்கு வழங்கப்படுவதில்லை எனவும் தொற்றாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை போராட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பொகவந்தலா பொலிஸார் இராணுவத்தினருடன் சம்பவ இடத்திற்கு வந்திருந்ததோடு, கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
சிகிச்சை நிலையத்தில் உள்ள கொரோனா தொற்றாளர்கள் ஆர்ப்பாட்டம். சிகிச்சை நிலையத்தில் உள்ள கொரோனா தொற்றாளர்கள்  ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on January 24, 2021 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.