இன்று (24) மாலை 6.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தலுக்கு
உட்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பகுதிகள் விடுவிக்கப்படுவதாக கொவிட் 19 பரவல் தடுப்பு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
விடுவிக்கப்படும் பகுதிகள்
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் நசீர் வத்த பகுதி.
நிட்டம்புவ பொலிஸ் பிரிவின் நிஹாரிய வடக்கு மற்றும் நிஹாரிய கிழக்கு கிராம அலுவலர் பிரிவிற்குட்பட்ட பன்சல வீதி, கத்தொட வீதி மற்றும் நிந்ரா மாவத்தைக்கு உட்பிரவேசிக்கும் பகுதிகள்
மினுவங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்ஒலுவ கிழக்கு மற்றும் கல்ஒலுவ மேற்கு
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்
இதேவேளை, இன்று மாலை 6.00 மணிமுதல் மினுவங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூம்மா மஸ்ஜித் மாவத்தை,
நிந்ரா மாவத்தை, புதிய வீதி மற்றும் அகரகொட ஆகிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Siva Ramasamy
இன்று மாலை 6 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்படும் பகுதிகள்.
Reviewed by Madawala News
on
January 24, 2021
Rating: