மியன்மாருக்கான விமான சேவைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக,
இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா உள்ளிட்ட தரப்பினருக்கு இடையில், காணொளி ஊடாக இது தொடபில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் பௌத கலாசார இணைப்புகள் உள்ள நிலையில், விமான சேவைகளை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது
அத்துடன், மியன்மாரில் மருத்துவச் சுற்றுலாவுக்காக ஏராளமான சாத்தியங்கள் உள்ளதாக, மியான்மருக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் நலின் டி சில்வா இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மியன்மாருடன் வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்துவதற்கான பெரும் சாத்தியங்கள் உள்ளதாக இலங்கை வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில், விமானப் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.