தாங்கள் கொரோனாவை அச்சமின்றி எதிர்க்கொண்ட குழுவினரே
அன்றி தப்பியோடி தலைமறைவானவர்கள் இல்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனிய கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கி பழகிய ஒருவராக இனங்காணப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் விதமாக குறித்த அறிக்கை வௌியிடப்பட்டிருந்தது.
கொரோனா தொற்றாளர்களை அடிக்கடி சந்திக்கும் வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் விஷேட வைத்தியர் அனுருத்த பாதெனியவின் வார்ட்டில் உள்ள வைத்தியர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை ஒன்றும் எதிர்பாராத விடயமல்ல எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாம் கொரோனாவை கண்டு ஓடி ஒழிந்துகொண்டோர் அல்ல ..
Reviewed by Madawala News
on
January 15, 2021
Rating: