மூன்று வயது பிள்ளையை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதன்
போில் 14 வயது சிறுவன் ஒருவனை மினுவாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி சிறுவன் நேற்றைய தினம் (24) கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தொிவித்தார்.
குறித்த சிறுமியின் தாய் மற்றும் தந்தை தொழில் நிமித்தம் வெளியில் செல்வதால் பாட்டியின் பாதுகாப்பிலேயே இந்த சிறுமி இருந்துள்ளார்.
விளையாடிவிட்டு வருவதாகக் கூறி குறித்த சிறுமியை சந்தேக நபரான சிறுவன் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்திலேயே சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தற்போது சிறுமி கம்பஹா மாவட்ட தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சிறுவன் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Siva Ramasamy
மூன்று வயது குழந்தை துஷ்பிரயோகம்... சிறுவன் பொலிஸாரால் கைது. #இலங்கை
Reviewed by Madawala News
on
January 25, 2021
Rating: