வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் தாழ்
அமுக்கமானது திருகோணமலையிலிருந்து கிழக்கு- தென் கிழக்குத் திசையில் சுமார் 590 km தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது அடுத்துவரும் 6 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்தது பலமான தாழ் அமுக்கமாக மாற்றமடையும். இதனைத் தொடர்ந்து வருகின்ற 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்தது சூறாவளியாக விருத்தியடையக்கூடும்.
சூறாவளியானது இலங்கையின் கிழக்குக் கரையை ஊடறுத்து மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடைப்பட்ட பகுதியினூடாக மேற்கு- வடமேற்குத் திசையை நோக்கி நாளை மாலையளவில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனபடியினால் நாட்டின் கிழக்கு கரையின் ஆழ்கடல் பிராந்தியங்களுக்கு மறுஅறிவித்தல் கிடைக்கும் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 100 mm இலும் கூடிய பலத்த மழை பதிவாகலாம்.
வடமேல் மாகாணத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
ஏனைய பிரதேசங்களின் சில இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, கிழக்கு, மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்திற்கு 30-40 km வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் பிராந்தியங்களில்.
காங்கேசன்துறை தொடக்கம் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான ஆழ்கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இக் கடல் பிராந்தியங்களின் கரையை அண்மித்த கடல் பகுதிகளில் கடல் அலையானது 2-3 m உயரத்திற்கு மேலெளக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளம் தொடக்கம் மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 55-60 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக் காணப்படும் .
தேசமானிய
மொஹமட் சாலிஹீன்
சிரேஸ்ட வானிலை அதிகாரி.
அடுத்துவரும் மணித்தியாலங்களில் சூறாவளியாக மாற்றமடையும் தாழ் அமுக்கம். தொடர்பான முழு விபரம்.
Reviewed by Madawala News
on
December 01, 2020
Rating: