இலங்கையில் 5 நாள் குழந்தை ஒன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த குழந்தை அட்டுளுகம பிரதேசத்தை சேர்ந்த தாய் ஒருவருக்கு கடந்த வாரம் 21ம் திகதி பிறந்துள்ள நிலையில் அந்த குழந்தை கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை பிசிஆர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
தாய்க்கு மேற்கொள்ளபட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளதை அடுத்து பிள்ளைக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இதுவரை பதிவான இளம் வயது கொரோனா தொற்றாளர் இந்த குழந்தை என்பது விஷேட அம்சமாகும்.
இலங்கையில் 5 நாள் குழந்தைக்கு கொரோனா !!
Reviewed by Madawala News
on
November 28, 2020
Rating: