போட்டோ அப்டேட் (Photo Update)


தன் மானத்தை இழந்து தன் போட்டோக்களை வட்சப் மற்றும் முகப்பக்கங்களில் ப்ரொபைல் ஆகவும் ஸ்டேட்டஸ்

ஏற்றும் பெண்கள் தன்மானம் இழக்கின்றனர்.
அல்லாஹ் தன் திருமறையில் "அறியாமைக் காலத்துப் பெண்கள் தன் அழகை வெளிப்படுத்தித் திரிந்தது போல் வெளிப்படுத்தித் திரிய வேண்டாம்"  என்று குறிப்பிட்டுள்ளான்.
அது தன்னை முழுமையாகவோ ஒரு துளியாகவோ கூட இருக்கலாம்.அவ்வாறு வெளிப்படுத்துவது அல்லாஹ்விடத்தில் பாவமாகும்.இன்றைய பெண்கள் தாம் நாகரிகமடைந்தவர்கள் என்று வெட்கத்தை இழந்து நாகரிமே அற்றவர்களாய் மாறிவிட்டனர்.    தன் புகைப்படத்தை ஒரு அந்நியப் பெண்கூட ப்ரொபைலில் கூட இடப் பயப்படும்  இந்தக் கேவலமான வேலைகளை நம் முஸ்லிம் பெண்கள்(சமூகத்தின் கண்கள்) செய்கின்றனர் எனில் நிலமை எங்கு செல்கிறது.இதன் பயங்கர விளைவால் ஒட்டுமொத்த முஸ்லிம் பெண்களின் எதிர்காலமும் ஐயத்திற்குட்படப் போகிறது.
அல்லாஹ் பெண்களை அழகிய முறையில் படைத்தது  மறைத்துப் பேணவே தவிர கண்டவன் கண்ணுக்கு விருந்தாகக் காட்டவல்ல.ஒரு பெண் சிறந்தவளாகவும் கண்ணியமானவளாகவும் கணிக்கப்படுவது எதுவரை எனில் அவள் தன் கற்பைப் பேணிப் பாதுகாக்கும் வரையுமாகும்.  
 
நபியவர்கள் கூறினார்கள்; "உனக்கு வெட்கம் இல்லை எனில் நீ விரும்பியதை செய்" ஏனெனில் ஒரு முஸ்லிம் எப்பொழுதும் வெட்கமுடையவனாகவே இருப்பான். அதற்குக் காரணம் வெட்கம் ஈமானின் பாதியாகும்.
ஒரு பெண் தன் ஒரு முடியை வெளிப்படுத்தினால் கூட நரகம் என்றால் கை,கால் முகம்,உடல் என அங்கம் அங்கமாக போட்டு சீரழிந்து கனவுலகில் பறக்கும் கன்னிகளை என்னவென்று சொல்ல..?
எந்த ஒரு விடயத்தையும் அசாதாரணமாகவே காதில் வாங்கிக் கொண்டு மறு காதால் விடும் சமுதாயமாக பெண்கள் மாறிவிட்டனர்.தான் பாதையில் சென்றால் இன்னுமொரு பெண் உடுத்தியிருப்பதைப் பாரத்து சீ'  என்று கூறும் பெண்களுக்குத் தெரியவில்லை போலும் தன் பின்னால் எத்தனை பேர் அவர்களை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்று.
தெரியாமல்  செய்வது தவறு.தெரிந்து தெரிந்து செய்வது தப்பு!
நகம் போதாதென்று விரலையும் விரல் போதாதென்று கையையும் கை போக இமோஜியால் மறைத்த முகம் அதுக்கு கொமன்ட்ஸ் கூடியது.அதுபோக முன்பக்கம் பார்த்த முழு புகைப்படம்...இப்போது என்ன?
முகத்தில் எங்கேயாவது ஒரு மூலையில் சிறிதாக இமோஜியுடன் முழு புகைப்படம்....!
மானத்தை ஏலம் விடும் வெட்கமில்லாத பெண்களே...!
இது பாவம் என்று மீண்டும் பழைய புராணம் கூற நான் புறப்படவில்லை.ஏனெனில் பாவம் என்று தெரிந்துதான் உங்களில் அனேகமானவர்கள் செய்கின்றீர்கள்.ஏனெனில் நல்லதோ, தீயதோ எதுவாயினும் ஒன்றை வழமையாக செய்யும் போது அது ஒருவரின் பழக்கவழக்கமாகிவிடும்.
இப்போது அது உங்கள் பழக்கவழக்கம்.அப்படித்தானே?
தெரியாமல் தான் ஒன்று கேட்கிறேன்.நீங்கள் உங்களின் வளைந்த நெளிந்த புகைப்படங்களை அப்லோட் பன்னுவது பார்ப்போர் எல்லாம் அழகிப் பட்டம் தருவதற்கா?அல்லது அது அதனைப் பார்ப்பவர்கள் எல்லோரும் இரசிக்கின்றார்கள் என்று நினைக்கின்றீர்களா?
உண்மையாக சொல்கின்றேன் இது மிகவும் கேவலமான ஒரு செயல்.ஷைத்தானியத்தானவர்களைத் தவிர வேறு எவரும் அதனை இரசிக்கவோ சரி காணவோ மாட்டார்கள்.
ஷைத்தானின் பகடைக்காயாகிவிடாதீர்கள்.அல்லாஹ் உங்களுக்குத் தந்த உடல் அமானிதம்.அது அவனை ஒரு நாள் அடைய இருக்கிறது.நீங்கள் பிறக்கும் போது எப்படி உங்கள் உடல்,ஆன்மா தூய்மையாக  இருந்ததோ அப்படியே அது அவனை அடைய வேண்டும்.அதற்கு நீங்கள் தான் பொறுப்புதாரி.
அல்லாஹ்விற்காக,அடுத்தவர்களின் லெஷர் டைமுக்கு உங்களை அடைமானம் செய்யாதீர்கள்!.
நிச்சயமற்ற இவ்வுலக இன்பங்கள் கொசுவின் இறக்கையினளவு கூட பெறுமதியற்றது.மரணம் இந்நொடியும் வரலாம்.பாவங்களிலிருந்து மீளாவிட்டால் அதனை விடத் துர்ப்பாக்கியம் வேறு இல்லை.அல்லாஹ் மிக்க மன்னிக்கக் கூடியவன்.! #BinthFauzar(SEUSL)



x

போட்டோ அப்டேட் (Photo Update)  போட்டோ அப்டேட் (Photo Update) Reviewed by Madawala News on October 18, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.