ஹிக்கடுவ பொலிஸாரால் போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தப் பெண் உயிரிழந்ததால், அப்பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக அப்பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் நேற்று (16) ஈடுபட்டுள்ளனர்.
இம்மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த 52 வயதுடையப் பெண் , சுகவீனம் காரணமாக கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளாகியே அப்பெண் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தே அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த பெண் உயிரிழப்பு.. உறவினர்கள் போலீஸ் நிலையம் முன் ஆர்பாட்டம்.
Reviewed by Madawala News
on
October 17, 2020
Rating: