பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் TAB வழங்கப்படும் : சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படவுள்ளதாக சபாநாயகர்
மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்களும் எழுத்து மூலமாக இதுவரை வழங்கப்பட்டு வருகின்றது.

இதனால் வீண் பணச்செலவு ஏற்படுவதுடன் நேரமும் வீண் விரயமாவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களின் மேசையில் இத்தகைய ஆவணங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் அவர்களின் ஏனைய நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு TAB வழங்கப்படுவதால், பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்குப்பத்திரம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் இதனூடாக வழங்க முடியும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் TAB வழங்கப்படுவதன் மூலம் அனைத்து ஆவணங்களையும் மின்னஞ்சல் மூலம் இலகுவாக அனுப்ப முடியும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில் TAB வழங்கப்படும் : சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விரைவில்  TAB வழங்கப்படும் : சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன Reviewed by Madawala News on September 21, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.