சாம்பியனான ஷர்க்கி இளைஞர் கழகம், அம்பாறை மாவட்ட மட்ட கால்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்று அசத்தல்.


(பீ. எம்.றியாத்)
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால்
நடாத்தப்படும் 32வது தேசிய மட்ட விளையாட்டு போட்டியினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் கழகங்களுக்கிடையிலான போட்டிகள் அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் றியாத் வதுறுதீன் தலைமையில் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதற்கமைய கழகங்களுக்கிடையிலான
கால்பந்தாட்ட  இறுதிச்சுற்றுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (13/09/2020) இடம்பெற்றது.

இச் சுற்றுப் போட்டியின் இறுதி போட்டிக்கு பாலமுனை இளைஞர் கழக அணியும் மற்றும் ஷர்க்கி இளைஞர் கழக அணியும் மோதின
இதில் 2க்கு 1 என்ற கோல் கணக்கில் ஷர்க்கி இளைஞர் கழக அணி வெற்றி பெற்று மாவட்ட இளைஞர் கழக விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது
சாம்பியனான ஷர்க்கி இளைஞர் கழகம், அம்பாறை மாவட்ட மட்ட கால்பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெற்று அசத்தல். சாம்பியனான ஷர்க்கி இளைஞர் கழகம், அம்பாறை மாவட்ட  மட்ட கால்பந்தாட்ட  போட்டிக்கு தகுதி பெற்று அசத்தல். Reviewed by Madawala News on September 14, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.