கொழும்பு வாழைத்தோட்டம் தினுகவின் நெருங்கிய சகா ஹெரோயினுடன் கைது !

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிவேக நெடுஞ்சாலை பாலத்திற்கு அருகில் வைத்து நபர் ஒருவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 


கொசல்வத்த தினுகவின் உதவியாளரான 27 வயதுடைய கொசல்வத்த ரைனா எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 


பொலிஸாரிற்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் குறித்த நபர் பயணித்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி பரிசோதனை செய்த சந்தர்ப்பத்தில் குறித்த நபரிடம் இருந்து ஹெரோயின் உட்பட பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 


இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின், 3 தொலைபேசிகள், 19 சிம் அட்டைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


பேலியகொட பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு வாழைத்தோட்டம் தினுகவின் நெருங்கிய சகா ஹெரோயினுடன் கைது ! கொழும்பு வாழைத்தோட்டம் தினுகவின்  நெருங்கிய சகா ஹெரோயினுடன் கைது ! Reviewed by Madawala News on August 05, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.