விரக்தியினால் வீடுகளிலேயே இருக்க வேண்டாம்... எந்தவொரு அரசியல் நிலைப்பாடு இருப்பினும் சென்று வாக்களிக்கவும்.
ஒட்டுமொத்தமாக இம்முறை தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக தேர்தல்கள்
கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வாக்கெடுப்பு நிலையங்களுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்யுமாறு பெப்ரல் அமைப்பின் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
நுகேகொட பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப வாக்கெடுப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு அரசியல் நிலைப்பாடு இருப்பினும் வாக்களிக்குமாறும் விரக்தியினால் வீடுகளிலேயே இருக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
விரக்தியினால் வீடுகளிலேயே இருக்க வேண்டாம்... எந்தவொரு அரசியல் நிலைப்பாடு இருப்பினும் சென்று வாக்களிக்கவும்.
Reviewed by Madawala News
on
August 05, 2020
Rating: