பாணந்துறை- பெக்கேகம மஹா வித்தியாலயத்துக்கு வாக்களிக்க வருகைத் தந்த நபரொருவர்,
திடீர் சுகயீனமடைந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், உயிரிழந்துள்ளாரென, பாணந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 80 வயதுடைய நபர் காலின் பீரிஸ் என்றும், இவர் குறித்த வாக்களிப்பு மத்திய நிலைய வளாகத்துக்குள் வருகைத் தந்து வாக்களித்து விட்டு வெளியேறும் போதே, திடீர் நோய்வாய்ப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
வாக்களிக்க வருகைத் தந்த நபரொருவர் உயிரிழப்பு.
Reviewed by Madawala News
on
August 05, 2020
Rating: