அங்கொட லொக்கா சம்பாதித்த அனைத்து சொத்துக்களும் அரசுடமை.



இந்தியாவில் உயிரிழந்ததாக கூறப்படும் பாதாள
உலகக்குழு உறுப்பினரான லசந்த பெரேரா என்ற அங்கொட லொக்கா இந்நாட்டில் முறையற்ற வகையில் ஈட்டிய அனைத்து சொத்துக்களையும் அரசுடைமையாக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.


இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.


கடந்த தினத்தில் சர்ச்சைக்குரிய மரணம் ஒன்று குறித்து தெரியவந்தது. அது லசந்த பெரேரா என்ற ´அங்கொட லொக்கா´ பாதாள உலகக்குழு உறுப்பினர் தொடர்பிலாகும்.


குறித்த மரணம் தொடர்பில் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தி கொள்வதற்காக வௌிவிவகார அமைச்சின் ஊடாக இராஜதந்திர மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அது தொடர்பில் இலங்கையில் இருந்து பெற்றுக் கொடுக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் இந்தியா உயர் ஸ்தானிகராலயத்தின் ஊடாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


உயிரிழந்துள்ளமை இதுவரையில் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. என ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
அங்கொட லொக்கா சம்பாதித்த அனைத்து சொத்துக்களும் அரசுடமை. அங்கொட லொக்கா சம்பாதித்த  அனைத்து சொத்துக்களும் அரசுடமை. Reviewed by Madawala News on August 10, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.