(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் கல்வி
நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க வேண்டி அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்தவகையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளை பார்வையிட கல்வி அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விஜயத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.
பாடசாலைகளை பார்வையிட வருகை தரும் அதிகாரிகள் பாடசாலை செயற்பாடுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதோடு, பாடசாலை நிர்வாகத்திற்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
பாடசாலைகளின் செயற்பாடுகளை பார்வையிட அதிகாரிகள் விஜயம்.
Reviewed by Madawala News
on
July 07, 2020
Rating: