நிட்டம்புவ, வத்துபிட்டிவெல தள வைத்தியசாலையில் வைத்தியராக நடித்த குற்றச்சாட்டுக்காக
கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை வத்துபிட்டிவெல வைத்தியசாலையின் பெண் விடுதியில் மருத்துவ உபகரணங்களுடன் ஒரு பையுடன் நுழைந்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு நோயாளியை தான் சந்திப்பதாக அவர் கூறியிருந்தபோதிலும், வருகை நேரம் முடிந்ததால் வைத்தியசாலை ஊழியர்கள் சந்தேகம் கொண்டு நிட்டம்புவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின்போது சந்தேக நபர் தான் ஒரு வைத்தியர் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டார்.
விசாரணையில் அவர் ஒரு இந்தியப் பிரஜையெனவும் திஹாரியாவில் வசித்து வருவதாகவும், இலங்கை பெண்ணை மணந்து பல ஆண்டுகளாக நாட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள் நிட்டம்புவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் திருமணம் முடித்து வைத்தியராக நடித்த இந்திய போலி வைத்தியர் சிக்கினார் .
Reviewed by Madawala News
on
July 27, 2020
Rating: