முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்காது புதைக்க அனுமதிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை.
அத்துடன் சமூகத்திற்காகவும் நாட்டுக்காகவும் குரல் கொடுப்பதற்காக எம்.பி பதவி கிடைக்காமல் போகுமாக இருந்தால் அதற்காக சிறிதும் கவலைப்பட மாட்டேன் என ஜனாதிபதி சட்டத்தரணியும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல் உறுப்பினருமான அலி சப்ரி குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கோவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம்களை தகனம் செய்வது தொடர் பாக வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு நான் பேட்டியளித் தமை தொடர்பாக ஒருசில கடும்போக்குவாதிகள் விமர் சித்து வருகின்றனர். குறித்த ஊடகத்துக்கு நான் பேட் டியளிக்கவில்லை.ஏற்கெனவே வேறு ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் தான் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் உலக நாடு களில் கொரோனாவினால் இறப்பவர்களை புதைக்க அனுமதிக்கையில் இலங் கையில் அதற்கு மறுப்பதாக இருந்தால் அது விஞ்ஞா னபூர்வமாகவோ மருத்துவ ரீதியாகவோ உறுதிப்படுத் தப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
புதைப்பதற்கு இலங்கையில் அனுமதி வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை .நான் புதிதாக எதுவும் கூறவில்லை. இந்த நிலையிலே இனவாதிகள் சிலர் இதனை பூதாகரமாக்க முயல்கின்றனர்.
அரசியல் ரீதியில் இந்த பிரச்சினையை தீர்க்க நான் முயன்றேன். என்னால் இயன்றதை மேற்கொண்டேன்.
அதனை வேறு தரப்பினருக்கு செய்ய முடியாது.சிலர் ஜனநாயக வழியில் வழக்கு தொடுத்துள்ளனர். வேறு சிலர் ராஜதந்திர மட்டத்தில் தீர்க்க முயல்கிறார்கள்.எமது உரிமைகளுக்காக போராடுவதில் எந்ததடையும் கிடையாது.