மாளிகாவத்தை பகுதியில் மூன்று பேர் உயிரிழப்பிற்கு காரணமான நிவாரணம் வழங்கலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் நிவாரணம் வழங்கலின் போது ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்ததோடு 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த நிவாரணம் வழங்கலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நிவாரணம் வழங்கும் செயற்பாடானது மாளிகாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றிலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மாளிகாவத்தை நிவாரணம் வழங்கிய சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது
Reviewed by Madawala News
on
May 21, 2020
Rating: