கொழும்பில் நிவாரண நிதி விநியோக செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
6 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட்டுள்ளதாக கூறப்பட்டது.
கொழும்பு மாளிகாவத்தையில் தாருஸ்ஸலாம் வித்தியாலத்தின் முன்னால் வீடு ஒன்றில் இடம்பெற்ற நிதி விநியோகத்தின் போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரால் குறித்த பணம் பகிர்ந்தளிக்கப்பட்டு உள்ளதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.
கொழும்பு மாளிகாவத்தையில் நெரிசலில் சிக்கி 3 பெண்கள் பலி
Reviewed by Madawala News
on
May 21, 2020
Rating: