ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணி
நேரத்திற்குள் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் காலை 6 மணி முதல் இன்றைய தினம் காலை 6 மணி வரையான 24 மணிநேர காலப்பகுதிக்குள் குறித்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 152 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதற்கமைய, நாடளாவிய ரீதியில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் 6 மணி முதல் இன்றைய தினம் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் 62 ஆயிரத்து 677 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 17 ஆயிரத்து 612 வாகனங்களும் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் 19 ஆயிரத்து 586 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி முதல் இன்று காலை 06 மணி வரையான காலப்பகுதிக்குள்ளேயே குறித்த வழக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் 7 ஆயிரத்து 661 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 515 பேர் கைது
Reviewed by Madawala News
on
May 24, 2020
Rating: