யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ்
போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளங்காணப்பட்ட நிலையிலேயே மேலும் இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்
இன்றைய தினம் 10 பேர் கொரோனா ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களுள் இருவரே இவ்வாறு அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் யாழ்ப்பாணத்தில் ஆராதனை நடத்திய போதகருடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் எனவும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நிலையிலேயே இன்று ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆனால் இவர்களுக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை என யாழ் போதானா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
யாழ்பானத்தில் மேலும் இருவருக்கு கொவிட் 19 தொற்று !!
Reviewed by Madawala News
on
April 02, 2020
Rating: