யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை மார்ச் மாதத்திலிருந்து தினம் தோறும்.

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான பயணிகள் விமான சேவை எதிர்வரும் March மாதம் முதல் தினமும் இடம்பெறுமென்றும், மேலும் யாழ்ப்பாணம் – சென்னை இடையே விமானக் கட்டணம் இரண்டு மடங்கு வரி அறவிடப்படுவது பொய்யென்றும், இலங்கையின் அனைத்து விமான நிலையங்களிலும் ஒரேயளவான விமான நிலைய வரியே அறவிடப்படுவதாக இந்திய விமான நிறுவனம் அறிவித்துள்ளது.




யாழ்ப்பாணம் சென்றுள்ள அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் அதிகாரிகள் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் பிரதிநிதிகளை வணிகர் கழகத்தில் சந்தித்தனர். இதன்போது யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை கடந்த 3 மாதங்களாக இடம்பெற்று வரும் நிலையில் அதனால் வடக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாதக, பாதக நிலைகள் தொடர்பில் அலையன்ஸ் எயார் அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
இந் நிகழ்வில் கலந்துரையாடப்பட்ட விடயங்களானவை:-


“யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் தற்போது கிழமைக்கு 3 நாட்கள் இடம்பெறும் சேவை இந்த மாத இறுதியில் அல்லது March மாத முதல் வாரத்திலிருந்து தினம் தோறும் விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்கான விமான சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுவதற்கு இரட்டை வரி காரணம் என ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்படுகிறது. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. இலங்கையிலுள்ள இரு சர்வதேச விமான நிலையங்களிலும் (கட்டுநாயக்க விமான நிலையம், மத்தல விமான நிலையம்) பயணியொருவரிடமிருந்து $60 ( சுமார் 11,000 ஆயிரம் ரூபா ) அறவிடப்படுகிறது.
எனினும் கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் விமானத்தில் 150 பேருக்கு மேல் செல்ல முடியும். எனினும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விமான ஓடு பாதையின் உள்கட்டமைப்பு வசதியின் அடிப்படையில் 70 பேரே செல்லக்கூடிய விமானமே சேவையில் ஈடுபட முடியும். அதில் சுமார் 50 பேரையே ஏற்றிச் செல்ல முடியும்.
இதனால் எரிபொருள் உள்ளிட்ட ஏனைய அதிகரித்த செலவுகள் காரணமாக சேவைக் கட்டணம் அதிகரித்துக் காணப்படுகிறது. 


அத்துடன், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக சென்னைக்கு பயணிக்கவுள்ளோர் 3 கிழமைக்கு முன்னர் முற்பதிவு செய்தால் கட்டணம் குறைந்த பயணச் சீட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். குறுகிய நாட்களுக்குள் பயணச்சீட்டை பதிவு செய்தால் அதிகமான கட்டணம் அறவிடப்படும்” என்று தெரிவித்தனர்.

IMG_3016.JPG
யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை மார்ச் மாதத்திலிருந்து தினம் தோறும். யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கான விமான சேவை மார்ச் மாதத்திலிருந்து தினம் தோறும். Reviewed by nafees on February 20, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.