"ஹைதராபாத் என்கவுண்டர் காரணமாக என்னுடைய மகளின்
ஆன்மா சாந்தி அடையும்” என்று கொல்லப்பட்ட ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
குற்றவாளிகள் நான்கு பேரையும் பொலிஸார் என்கவுண்டர் செய்தனர்.
ஆரிப் பாஷா 26,
சிவா 20,
நவீன் 20,
சிண்டகுண்டா கேஷ்வலு 20
என நான்கு பேரும் இன்று என்கவுண்டர் செய்யப்பட்டனர்.
தெலுங்கானா பொலிஸ் இவர்களை என்கவுண்டர் செய்தது.
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த 27ம் தேதி புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார். பின்னர் உடலை எரித்தனர்.
இந்த என்கவுண்டர் தொடர்பாக கொல்லப்பட்ட ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார்.
அதில்,” 4 பேரின் என்கவுண்டர் நிம்மதி தருகிறது. அவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இப்போதுதான் என் மனம் நிம்மதி அடைகிறது.
என் மகளின் ஆன்மா சாந்தி அடைந்துவிடும். என் மகள் அனுபவித்த வேதனைக்கு பதில் கிடைத்துள்ளது.
இது மற்றவர்களுக்கும் சரியான உதாரணமாக இருக்கும். தெலுங்கானா பொலிஸ் இதில் வேகமாக செயல்பட்டது.
கமிஷ்னர் விசி சஜ்னார் மிகவும் துரிதமாக செயல்பட்டார். பொலீசுக்கு மிக்க நன்றி. இந்த கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது மீடியாதான்.
அவர்கள்தான் இதை இந்தியா முழுக்க கொண்டு சென்றது. அவர்களுக்கு மிக்க நன்றி” என்று ஹைதராபாத் மருத்துவரின் தந்தை தற்போது பேட்டி அளித்துள்ளார்.
முன்னதாக இந்த வழக்கில் பொலிஸார் சரியாக செயல்படவில்லை. பொலிஸ் எங்கள் எப்ஐஆரை பதிவு செய்யவில்லை என்று ஹைதராபாத் மருத்துவரின் தந்தை புகார் வைத்து இருந்தார்.
இதனால் மூன்று பொலிஸார் அப்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
போலீசாருக்கு மிக்க நன்றி : இது மற்றவர்களுக்கும் சரியான பாடமாக இருக்கும்.
Reviewed by Madawala News
on
December 06, 2019
Rating: