இந்நாட்டு உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக தனது ஆட்சியின் கீழ் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கந்துருவெல நகரில் நேற்று (12) பிற்பகல் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இம்முறை பொலன்னறுவையில் அனைத்து தேர்தல் தொகுதிகளிலும் மூன்று ஆசனங்களிலும் வெற்றி உறுதியாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விசேடமாக இந்த பிரதேசங்களை சேர்ந்த கால்நடை விவசாயிகளுக்கு நவம்பர் 16 ஆம் திகதியின் பின்னர் மேய்ச்சல் புல்வெளிகளை பெற்றுத்தருவதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உணவு உற்பத்தி மற்றும் தேசிய உற்பத்தியை உச்சத்திற்கு கொண்டு வருவதாகவும் அதனூடாக விவசாயத்திற்கு எந்த அரச தலைவரும் செய்யாத ஒன்றை தான் செய்யப் போவதாக அவர் கூறினார்.
அது என்னவென்றால், நெல் சாகுபடி, மரக்கறி மற்றும் பழ சாகுபடி போன்ற அனைத்து விவசாய நடவடிக்கைகளுக்காகவும் இந்நாட்டு வரலாற்றில் முதற்தடவையாக இலவசமாக உரத்தை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சஜித் பிரேமதாச இதன்போது தெரிவித்திருந்தார்.