தெஹிவளை மிருகக்காட்சி சாலையினுல் ஹெரோயின் வர்த்தகம். அங்குள்ள அலுமாரியில் இருந்து 400 கிராம் ஹெரோயின் மீட்பு. இருவர் கைது.


தெஹிவளை மிருகக்காட்சி சாலையில் சேவையாற்றும் நபர் ஒருவர் ஹெரோயினுடன்
கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு பிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 100 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹிவளை, கடுவான பகுதியை சேர்ந்த 34 வயதுடைய கசுன் ஷெஹன் எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 100 கிராம் ஹெரோயினுடன் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளை, களுபோவில பகுதியை சேர்ந்த 41 வயதுடைய நாலக புஷ்பகுமார எனும் மிருகக்காட்சி சாலை ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மிருகக்காட்சி சாலையில் உள்ள அலுமாரியில் இருந்து 400 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர்கள் மிருகக்காட்சி சாலையினுல் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சி சாலையினுல் ஹெரோயின் வர்த்தகம். அங்குள்ள அலுமாரியில் இருந்து 400 கிராம் ஹெரோயின் மீட்பு. இருவர் கைது. தெஹிவளை மிருகக்காட்சி சாலையினுல் ஹெரோயின் வர்த்தகம். அங்குள்ள அலுமாரியில் இருந்து 400 கிராம் ஹெரோயின் மீட்பு. இருவர் கைது. Reviewed by Madawala News on October 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.