புர்கா அல்லது முகத்தை மூடி அணியும் ஹெல்மட் என எதுவாக இருந்தாலும் முகத்தை முழுவதும்
மறைந்துகொண்டு செல்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அமைச்சர் மனோ கனேசன் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் முஸ்லிம் அல்லாத அனைவரும் இலங்கையர் என்ற வகையில் இது தொடர்பில் கவனமெடுக்க வேண்டும்.
எங்களுக்கு சிங்கள முஸ்லிம் தமிழ் என்பதை தாண்டி எமது நாடு என்பது முக்கியமானது.நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எவருக்கும் செயற்பட முடியாது.
நாம் சட்டத்தை உருவாக்க வேண்டும்.அவசர கால சட்டம் முடிவுக்கு வந்ததுள்ளதால் மீண்டும் முற்றுமுழுதாக மறைத்துக்கொண்டு செல்வது பிழையான செயற்பாடு.நாட்டு மக்கள் என்ற ரீதியில் அனைவரும் பொறுப்போடு செயற்பட வேண்டும் என அவர் கூறினார்.
முகத்தை முழுவதும் மறைந்துகொண்டு செல்வது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் !
Reviewed by Madawala News
on
September 22, 2019
Rating: