இந்த முறை எமக்கு ஒரு வாய்ப்ப­ளித்துப் பாருங்கள்.



வெறுமனே ஆட்சியாளர் தலை­களை மாற்றிக்கொண்டு வழமை­யான ஊழல்வாத
 அரசியலை செய்ய இனியும் இடமளிக்க கூடாது. இந்த ஜனாதிபதி தேர்தலில் மக்களின் பலத்தைக்கொண்டு அடுத்த பொதுத் தேர்தலில் அரசியல் மாற்ற­மொன்றை செய்வதே எமது இலக்கு என தேசிய மக்கள் சக்தியின் ஜனா­திபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.


இந்த ஒரு முறை எமக்கு வாய்ப்ப­ளித்துப் பாருங்கள். ஜனநாயக மாற்­றத்தையும், அதேபோல் ஜனாதிப­திகள் வசமிருந்த மக்களின் சொத்­துக்களை மக்கள் மயமாக்கிக் காட்­டுகின்றோம் எனவும் அவர் வாக்கு­றுதி வழங்கினார்.


தேசிய மக்கள் சக்தியின் அனுராத­புரம் மக்கள் சந்திப்பில் கலந்து­கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில்,


இன்று ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்­காக நாம் இயங்கி வருகின்றோம். இந்த தேர்தல் இந்த நாட்டுக்கான ஆட்­சியாளர் ஒருவரையும் அரசாங்கம் ஒன்றினையும் உருவாக்கும் முக்­கிய தேர்தலாகும். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க தேர்­தல்களாகும். இதில் மக்கள் எதிர்­பார்ப்புடன் ஆட்சியாளர்களை நிய­மித்து குறுகிய காலத்தில் அர­சாங்கத்தையும் ஆட்சியாளர்க­ளையும் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த விமர்சனங்கள், குற்றச்சாட்டுக்களில் மாத்திரம் ஆட்­சியை மாற்றிவிட முடியாது. 


மாறாக மக்கள் சரியான மாற்ற­மொன்றை உருவாக்க வேண்டும். மாற்றத்தை உருவாக்கும் அதி­காரம் மக்களிடமே உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்­களின் அதிகாரத்தை ஒரு குழுவி­னருக்கு வழங்குகின்றனர். இம்­முறை இந்த அதிகாரத்தை யார் கைகளில் கொடுக்க வேண்டும் என்­பதை மக்களே தீர்மானிக்க வேண்டும்.


இன்று எமக்கு எவ்வாறான ஆட்சி வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். இந்நாட்டில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியிலிருந்து மீளும் ஆட்சி­யொன்று வேண்டும். ஆகவே இத்த­ருணம் மிகவும் முக்கியமான தரு­ணமாகும். இதுவரை காலமாக மக்கள் உருவாக்கிய ஆட்சிகள் பலவீ­னமான ஆட்சிகள் என்பது தொடர்ச்சி­யாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உருவாக்க கொண்­டுவரப்பட்ட ஆட்சியாளர்கள் முதலில் ஜனநாயகத்தையே மீறினார்கள். அதேபோல் பொருளாதாரத்தை கட்­டியெழுப்ப வந்ததாக கூறியவர்கள் செய்ததெல்லாம் களவுகளும் கொள்ளைகளுமே. 


ஜனநாயகம் என கூறியவர்கள் மூலமாக வெள்­ளைவேன் கடத்தல், கொலைகள், குற்­றங்கள் அதிகரித்ததையும் கடன்­களை வாங்கி நாட்டின் பொருளா­தாரத்தை நாசமாக்கியதுமே நில­வியது. இவ்வாறு ஆட்சியில் இருந்­தவர்கள் மாறி மாறி தமது நாசகார வேலையினையே செய்தனர். ஒரு ஆட்சியாளர் மீது நம்பிக்கை வைத்து அவரை தெரிவு செய்­வதும் பின்னர் அவர் ஊழல்வாதி­யென அவரை மாற்றுவதுமாக இதே சக்கரமே சுழன்று கொண்­டுள்ளது.


 இனியாவது மக்கள் இதி­லிருந்து விடுபட வேண்டும். இந்த சுழற்சியை இந்த தேர்தலிலாவது நிறுத்தவேண்டும். இனியும் இந்த இரண்டு பிரதான அணியையும் நம்பி வாக்களிக்க முடியுமென நீங்கள் நினைக்கின்றீர்களா? 


இனியும் இவர்களில் எவரையும் மக்­களால் நம்ப முடியாது.


இனியும் இவர்களால் நாட்டினை கட்டியெழுப்ப முடியாது. தனி நபர்களை கொண்டு இந்த நாட்டை பலப்படுத்த முடியாது. ஒரு நாட்­டினை கட்டியெழுப்புவது என்­பது மாயாஜால வேலையல்ல. இந்த நாட்டை நேசிக்கும் நபர்கள் மூல­மாகவே இந்நாட்டைக் கட்டியெ­ழுப்ப வேண்டும். மக்களுக்கு ஏற்­படும் கஷ்டங்களை தமக்கு ஏற்படும் கஷ்டமாக நினைத்து வேலை செய்யும் நபர்களே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும். 



ஆனால் இந்த ஆட்சியா­ளர்கள் அவ்வாறு மக்கள் குறித்து சிந்திக்கும் ஆட்சியாளர்கள் அல்ல. இவர்கள் தமது சுகபோக வாழ்க்­கையை மட்டுமே சிந்தித்து ஆட்சி செய்கின்றனர்.


 ஆகவே மக்களுக்­கான அணி இன்று உருவாக்கப்பட்­டுள்ளது. தேசிய மக்கள் சக்தியுடன் மக்கள் இணைய வேண்டிய தருணம் வந்துள்ளது. 



இப்போது எமக்குள்ள நோக்கம் இந்த தேர்தலை அடிப்படை­யாகக் கொண்டு அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றமொன்று வேண்டும் என்பதேயாகும். தனிந­பரை மாற்றி எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை. ஆகவே அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சி மாற்றமொன்றை உருவாக்குவதே எமது பிரதான நோக்கமாகும்.


 இந்த தேர்தலில் மக்களின் எதிரிக்கும் மக்களின் நண்பனுக்கும் இடையிலான போட்டியே இடம்பெறுகின்றது. இதில் பெரிய எதிரி யார், சின்ன எதிரி யார் என்ற காரணம் எல்லாம் எடுபடாது. மாற்று அணியில் உள்ளவர்களே எதிரிகள். அவர்களுக்கு எதிராக நாம் களமிறங்கியுள்ளோம். இதில் மக்கள் யாரை ஆதரிப்பது என்பது மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.

நன்றி:  vidivelli
இந்த முறை எமக்கு ஒரு வாய்ப்ப­ளித்துப் பாருங்கள். இந்த  முறை எமக்கு ஒரு  வாய்ப்ப­ளித்துப் பாருங்கள். Reviewed by Madawala News on September 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.