ஐந்து வருடங்கள் போதாது... இன்னும் 5 வருடங்கள் செயல்பட்டால் தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்ப முடியும்.
(நா.தினுஷா)
நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு ஒற்றுமையை
கட்டியெழுப்புவதற்கு ஐந்து வருடங்கள் போதாது. அடுத்து வரும் ஐந்து வருடங்களிலும் அதற்காக செய்ற்பட்டால் மாத்திரமே தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்ப முடியும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மொழி பயிற்றுவிப்பாளர்களை திசைமுகப்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை பிரதமர் விக்கிரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
வரலாற்றில் எமது தலைவர்கள் சகலரும் இன , மத வேறுபாடின்றி ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடனேயே செயற்பட்டனர்.
அதனூடாக அவர்களின் இலக்குகளை வெற்றிகொண்டார்கள். இதேவேளை நாம் முப்பது வருட யுத்தத்தை காலத்தை சந்தித்துள்ளோம். அதன் தொடர்ச்சியாக நாட்டை அபிவிருத்தி செய்யும் பணிகளே தற்போது இடம்பெற்று வருகின்றன.
பாதைகளை நிர்மாணம் , கட்டிட நிர்மாணம் போன்ற பௌதீக அபிவிருத்திகள் கண்ணுக்கு புலப்படக் கூடியவை. அவ்வாறான அபிவிருத்தி பணிகள் பிரமாண்டமாக பார்க்கப்படக் கூடியவை.
இவற்றுக்கு அப்பால் நாட்டின் அடையாளத்தை பாதுகாப்பதிலேயே எங்களின் முன்னேற்றம் தங்கியுள்ளது.
நாட்டின் அடையாளத்தை பாதுகாத்துக்கொண்டு ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கு ஐந்து வருடங்கள் போதாது. அடுத்து வரும் ஐந்து வருடங்களிலும் அதற்காக செய்ற்பட்டால் மாத்திரமே தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்ப முடியும.;l
2015 ஆம் ஆண்டு அரசியல் தீர்வு பெற்றுக்கொடுப்பதாக வாக்குறுதி வழங்கியிருந்தோம். அது தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
ஆகவே அந்த விடயத்தில் தீர்வை பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை நாமே உருவாக்கினோம். அதேபோன்று தற்போது அந்த ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐந்து வருடங்கள் போதாது... இன்னும் 5 வருடங்கள் செயல்பட்டால் தேசிய ஒற்றுமையை முழுமையாக கட்டியெழுப்ப முடியும்.
Reviewed by Madawala News
on
September 10, 2019
Rating: