VIDEO இணைப்பு: பொதுபல சேனா தேரர்களின் புகைப்படங்களுடன் வந்து தப்பி ஓடியவர்கள் தொடர்பில் விகாராதிபதி தேரர் போலீசில் முறைப்பாடு .
அத்துருகிரிய - கல்பொத்த பிரதேச விகாரைக்கு வந்த நான்கு நபர்கள் தொடர்பில் தமக்கு சந்தேகம்
ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து அவ்விகாரை விகாராதிபதி தேரர் போலீசில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
தாயாருக்கு சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக கூறி அதற்கு பரிகாரம் தேடி தமது விகாரைக்கு வந்தவர்களை பரிசோதித்த போது அவர்களிடம் பொதுபல சேனா அமைப்பின் தேரர்களின் புகைப்படங்கள் பைல் செய்து வைக்கபட்டு இருந்ததாகவும் அது தொடர்பில் கேட்டபோது வந்தவர்கள் தப்பித்து சென்றதாகவும் விகாராதிபதி தேரர் போலீசில் முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்ட தகவலின் வீடியோ :
VIDEO இணைப்பு: பொதுபல சேனா தேரர்களின் புகைப்படங்களுடன் வந்து தப்பி ஓடியவர்கள் தொடர்பில் விகாராதிபதி தேரர் போலீசில் முறைப்பாடு .
Reviewed by Madawala News
on
August 13, 2019
Rating: