உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களுக்குத் தொடர்ந்தும் விளக்கமறியல் ;கல்முனை பதில் நீதிபதி பயாஸ் றஸாக் உத்தரவு
பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தின் பெயரில் கைதான 14
பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பேரையும் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு மாவட்ட நீதிபதியும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிபதியுமான பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது ஆஜர்படுத்தப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர்களால் அவசரகால சட்டத்தின் கீழ் கடந்த காலங்களில் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கைதாகி, இரு மாதங்களிற்கு மேலான தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பான விசாரணைகள் யாவும் இன்று மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதன் போது சந்தேகநபர்கள் 14 பேருக்கும் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டு, வழக்கு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4 திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதான சந்தேக நபர்கள் அனைவரும் காத்தான்குடி, கல்முனை, சாய்ந்தமருது , மருதமுனை, சம்மாந்துறை , உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
– பாறுக் ஷிஹான் –
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சந்தேக நபர்களுக்குத் தொடர்ந்தும் விளக்கமறியல் ;கல்முனை பதில் நீதிபதி பயாஸ் றஸாக் உத்தரவு
Reviewed by Madawala News
on
August 21, 2019
Rating: