கொழும்பு - கொம்பனித்தெரு பகுதியில் ' மெட்ரோ ஹோம்ஸ் ' வீட்டுத்திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது :
இதற்கு முன்னர் இருந்த அரசாங்கங்கள் இது வரையில் கொழும்பிற்கு 9000 மாடி வீடுகளை வழங்கியிருக்கின்றன. ஆனால் நாம் ஆட்சிக்கு வந்து நான்கு வருடங்களில் 15 ஆயிரம் வீடுகளை வழங்கியிருக்கின்றோம்.
எதிர்வரும் ஓரிரு மாதங்களில் இன்னும் 5000 வீடுகளை மக்களிடம் கையளிக்கவுள்ளோம். அது மாத்திரமின்றி எதிர்வரும் மாதங்களில் சுமார் 6000 வீடுகளை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம்.
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் 2000 வீடுகள் வழங்கப்படவுள்ளன என தெரிவித்தார்.
ஆயிரம் வருட அபிவிருத்தியை ஒரு வருடத்தில் செய்துள்ளோம் !!
Reviewed by Madawala News
on
August 03, 2019
Rating: