திறமையான நிர்வாகத் திறன் கொண்ட , பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒருவர் எமது ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார்.


கடந்த காலங்களில் விட்ட தவறுகள் குறைபாடுகளை சீர்செய்து நாட்டை பாதுகாத்து புதிய பாதையில்
செல்ல வேண்டிய நேரம் எழுந்துவிட்டதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது ,

பொதுஜன பெரமுனவின் மாநாட்டுக்கு வருமாறு எதிர்க்கட்சியில் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எம் பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். சுதந்திரக் கட்சி எங்களுக்கு ஆதரவை வழங்குவது குறித்து பேச்சு நடத்தப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எனக்கு அதிர்ஷ்டமில்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் திறமையான நிர்வாகத் திறன் கொண்ட , பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்படுவார். கோட்டாபய ராஜபக்ச தனது அமெரிக்க குடியுரிமையை நீக்கிக் கொண்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசு ஒன்றை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் . அவரின் வழிகாட்டலின் கீழ் ஆட்சி முன்னெடுக்கப்படும்.

உள்ளூராட்சி தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு பெரும்பான்மையான மக்கள் ஆதரவை பெறவில்லை. ஆனாலும் வடக்கின் பல கட்சிகள் மட்டுமல்ல மலையகம் , கிழக்கில் பல கட்சிகள் எங்களுடன் உள்ளன. அவர்களுடன் இணைந்து பேசி ஆட்சியை அமைப்போம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அரசியல் பிரமுகர்கள் சம்பந்தப்பட்டிருந்தால் அவர்களுடன் நாங்கள் எந்த தொடர்பையும் வைக்கமாட்டோம்.ஆனால் என் மீதும் வீண் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெள்ளை வேனில் நீதிமன்றம் கொண்டு சென்றனர். நாம் யோசித்து முடிவெடுப்போம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்தால் வெற்றிபெறுவோம் என்றும் இல்லை தோல்வியடைவோம் என்றும் இல்லை .ஆனால் எல்லா கட்சிகளையும் இணைத்து போட்டியிட வேண்டும்.

பொதுஜன பெரமுனவின் தலைமை பொறுப்பை ஏற்பதால் மஹிந்தவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியோ எம்பி பதவியோ இல்லாமல் போகுமானால் அதைப்பற்றி எமக்கு கவலையில்லை.மஹிந்த எப்போதும் மக்கள் மனதில் உள்ளார். அவர் மக்கள் தலைவர்.

சர்வதேச ரீதியாக நாங்கள் கடந்த கால தவறுகளை மீண்டும் செய்யமாட்டோம். உலக நாடுகள் பலவற்றுடன் இராஜதந்திர ரீதியில் நாங்கள் நெருங்கிச் செயற்படுகிறோம்.

கோட்டாபய ஜனாதிபதியாக வருவதற்கு மக்கள் அச்சப்படுவதாக செய்தியாளர் ஒருவர் கேட்டமைக்கு பதிலளித்த பசில் , அப்படி அச்சப்பட தேவையில்லை என தெரிவித்தார்.

தோட்ட மக்களின் பிரச்சினை கவனிக்கப்பட வேண்டும். அவர்களின் பிரச்சினைகள் பலவற்றை நாங்கள் தீர்த்தோம்.தபால் விநியோகம் , மின்விநியோகம் , உட்கட்டமைப்பு வசதிகள் செய்தோம். காணி பிரச்சினை ஒன்று இருந்தது. தொழிலாளர்கள் சம்பள விடயத்தில் நாங்கள் முழு கவனம் செலுத்துவோம்.  என்றார் பசில்
திறமையான நிர்வாகத் திறன் கொண்ட , பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒருவர் எமது ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்படுவார். திறமையான நிர்வாகத் திறன் கொண்ட , பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒருவர் எமது ஜனாதிபதி  வேட்பாளராக நியமிக்கப்படுவார். Reviewed by Madawala News on August 08, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.