சீரற்ற வானிலையால் துண்டிக்கப்பட்டுள்ள மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை
எடுத்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தறை மற்றும் காலி மாவட்டங்களில் மாத்திரம் 1,20,000-இற்கும் அதிக பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நிலவும் பலத்த காற்றுடன் கூடிய வானிலை காரணமாக மின்கம்பிகள் மீது மரங்கள் முறிந்து வீழந்துள்ளன.
இதன் காரணமாகவே மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளது.
120,000 பாவனையாளர்களுக்கான மின்சார விநியோகம் துண்டிப்பு: வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை
Reviewed by Madawala News
on
July 20, 2019
Rating: