சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடத்தல் முறியடிப்பு..


மன்னார் - மதவாச்சி வீதியில் ஆண்டியபுளியன்குளம் பிரதேசத்தில் ஒரு தொகை கேரளா கஞ்சாவுடன்
சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி இன்று அதிகாலை  நடத்திய சுற்றிவளைப்பில் கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிய வகை லொறியொன்றில் இருந்து  203 கிலோ கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், இதன் பெறுமதி சுமார் 20 மில்லியன் ரூபா எனவும்  இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு விநியோகத்திற்காக கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

பிடிபட்டவர் பளை - அடப்பன்  பிரதேசத்தை சேர்ந்த 63 வயது சந்தையாபிள்ளை தேவதாஸ் எனவும்

இவர் இன்று  நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடத்தல் முறியடிப்பு.. சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சா கடத்தல் முறியடிப்பு.. Reviewed by Madawala News on July 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.