ஜனாதிபதியும் பிரதமரும் பாலர் பாடசாலை பிள்ளைகளை போல் அடிக்கடி சண்டைபிடித்துக்கொள்கின்றனர் என ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
நாட்டில் தற்போது அரசாங்கம் ஒன்று இல்லாத ஒரு நிலைமை தோன்றியுள்ளதாக கூறியுள்ள அவர் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை சீர்செய்ய உடனடியாக பாராளுமன்ற தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலுக்கு செல்லவேண்டும். அல்லது ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களையும் நடத்த வேண்டும்.
அப்படி செய்தால் மாத்திரமே நெருக்கடி நிலமை சீராகும் என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதியும் பிரதமரும் பாலர் பாடசாலை பிள்ளைகளை போல் அடிக்கடி சண்டைபிடித்துக்கொள்கின்றனர்..
Reviewed by Madawala News
on
June 14, 2019
Rating: