அஸ்கிரிய மஹாநாயக்க தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் இரண்டு பொலிஸ்
முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ தலைமையகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் கடைகளை புறக்கணிக்குமாறு மஹாநாயக்க தேரர் குறிப்பிட்ட கருத்து தொடர்பில் இரு முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரபல சமூக ஆர்வளர் பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் தெஹிவளை பிரதேசத்தை சேர்ந்த மொஹமட் பஸால் நிஸார் என்ற இருவரே இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் நீதி பிரிவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
அஸ்கிரிய மஹாநாயக்க தேரருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு !
Reviewed by Madawala News
on
June 26, 2019
Rating: