இரத்தினபுரி - எகொடமல்வல பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று (16) அதிகாலை 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எகொடமல்வல பகுதியை சேர்ந்த 43 வயதுடைய லாலனி புஷ்பலதா மற்றும் அவரது தாயான 75 வயதுடைய கே. நந்தவதி ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த மகளின் கள்ள கணவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தாக்குதலில் தாயும் மகளும் பலி.. #தகாத உறவால் வந்த வினை.
Reviewed by Madawala News
on
May 16, 2019
Rating: