ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் வெள்ளவத்தையை சேர்ந்த தமிழ் இளைஞர் ஒருவரை எல்ல நகர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எல்ல நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஈ.எஸ்.பெர்னாண்டோ மாவத்தை, கொழும்பு 6 என்ற முகவரியை சேர்ந்த 36 வயதான நபர் .
சந்தேக நபரின் கையடக்க தொலைபேசியில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய குறுந்தகவல் ஒன்று உள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் SMS ஐ தொலைபேசியில் வைத்திருந்த நபர் கைது.
Reviewed by Madawala News
on
May 19, 2019
Rating: